Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

அரசுப் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு :

திருப்பூர்

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் ரோசிலி (30). இவர்,உறவினர் வீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க நேற்று திருப்பூர் வந்தார். கண்டியன்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப்பேருந்தில் சென்றார்.தாராபுரம் சாலை தெற்கு காவல் நிலையம் அருகே பேருந்துசென்றபோது, தனது கைப்பையில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை காணாமல் போனதை உணர்ந்த ரோசிலி, கூச்சலிட்டார். இதையடுத்துபேருந்து நிறுத்தப்பட்டு, தெற்குகாவல்நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டது. பேருந்தில் இருந்தவர்களிடம் போலீஸார்சோதனை நடத்தியும் நகை கிடைக்கவில்லை. மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x