செஞ்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை :

செஞ்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை :

Published on

செஞ்சி அருகே வீட்டை சேதப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட் டவர் கொலை செய்யப்பட்டார்.

செஞ்சி அருகே சே.பேட்டை பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வீரமுத்து(27) என்பவருக்கும், அதே கிராமத் தைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரன், விஜயகுமார் ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வீரமுத்துநேற்று காலை ராஜேந்திரன்,விஜயகுமார் வீடுகளுக்குள் புகுந்து வீட்டு உபயோகப் பொருட்களை சேதப்படுத்தி யுள்ளார். இதனால் விஜயகுமார் (35), ராஜேந்திரன் (28 ) , சுந்தரம், அவரது மனைவி ரத்தினம், உறவினர்ஏழுமலை ஆகியோர் வீரமுத்துவை கல்லால் அடித்துதாக்கியுள்ளனர். இதில் படுகா யமடைந்த வீரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து 5 பேரும் தப்பியோ டிவிட்டனர். இத்தகவல் அறிந்த நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜயகுமார் (35), ராஜேந்திரன் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in