திமுக ஆட்சியை அதிமுகவினரே பாராட்டுகின்றனர் : உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

திமுக ஆட்சியை அதிமுகவினரே பாராட்டுகின்றனர் :  உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
Updated on
1 min read

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.

இதில், கட்சியில் சேர்ந்தவர்களை வரவேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசியது: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முத்து முத்தான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் யாருமே திமுக அரசை எதிர்த்து பேசுவதில்லை. அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் போன்றோர்கூட திமுக அரசை பாராட்டி பேசும் அளவுக்கு திமுக ஆட்சியின் செயல்பாடு உள்ளது. இதனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகும் திமுக ஆட்சியே தொடரும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அரசு வழக்கறிஞர் ரவிச்சந்திரன், மநீம மாவட்டத் தலைவராக இருந்த மூர்த்தி உள்ளிட்ட சுமார் 5,000 பேர் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கீரனூரில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு, புதுக்கோட்டையில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in