நாமக்கல்லில் ஐஓசி சார்பில் டீசல் விற்பனை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் :

நாமக்கல்லில் ஐஓசி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் டீசல் அதிகம் விற்பனை செய்த ஐஓசி பங்க் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல்லில் ஐஓசி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் டீசல் அதிகம் விற்பனை செய்த ஐஓசி பங்க் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Updated on
1 min read

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்க பெட்ரோல் பங்க் வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் சார்பில் டீசல் விற்பனை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஐஓசி நிர்வாக இயக்குநர் அபிதாப் அக்யூரி தலைமை வகித்தார். தொடர்ந்து டீசல் விற்பனை அதிகப்படுத்துவதற்கான ஆலோசனை களை ஐஓசி அதிகாரிகள் வழங்கினர். மேலும், டீசல் விற்பனையில் நிலவும் சிக்கல் குறித்து கேட்டறிந்த அதிகாரிகள் அவற்றை கலைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் வதாகவும் உறுதியளித்தனர். தொடர்ந்து டீசல் அதிகம் விற்பனை செய்த பங்க் உரிமையாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

அதுபோல் வாகனங்களுக்கான காஸ் பயன்பாடு குறித்தும், விளக்கிக் கூறப்பட்டது. ஐஓசி பொதுமேலாளர்கள் ஆர். எஸ். காஜ்பைய், பி.குமரவேல், ஆர். சுரேஷ், சுரேஷ்குமார் ஜெயகிருஷ்ணன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் வாங்கிலி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in