விருதுநகரில் ஆசிரியர் தற்கொலை :

விருதுநகரில் ஆசிரியர் தற்கொலை :
Updated on
1 min read

விருதுநகர் தனியார் விடுதியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் திருமலைராஜன் (45). திருப்பூரில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பவுன்தாய் (42). ஆமத்தூர் அருகே உள்ள வெள்ளூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு சாத்தூரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் ஆசிரியர் திருமலைராஜன் குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார். இதனால் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞரை பார்க்க கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்ற திருமலைராஜன் விருதுநகர்- சிவகாசி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று வெகுநேரமாக அறை கதவு திறக்காததால் சந்தே கம் அடைந்த விடுதி ஊழி யர்கள் அறைக்கதவை திறந்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் திருமலைராஜன் இறந்து கிடந்தார். ஆமத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in