செப். 11-ல் - தேசிய மக்கள் நீதிமன்றம் :

செப். 11-ல் -  தேசிய மக்கள் நீதிமன்றம் :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரான மாவட்ட நீதிபதி வி.தங்கமாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் வரும் 11.09.2021 அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தாலுகா சட்டப்பணிகள் குழுக்கள் மூலமாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாக முடிக்கப்படும் வழக்குகளில் அன்றைய தினமே உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுகிறது. அத்தீர்ப்பின் மீது மேல்முறையீடு கிடையாது. நீதிமன்ற முத்திரை கட்டணம் கிடையாது. எனவே, வரும் 11.09.2021 அன்று நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள், வழக்குதாரர்கள், வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள், காப்பீடு நிறுவனத்தினர், காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசு துறையினர் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in