

திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர், பள்ளி மாணவர்கள் 3 பேர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர் ஒருவர் என 6 மாணவர்களுக்கு கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்.1-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 5-ம் தேதியன்று பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும், முதுநிலை பிரிவு மாணவர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.
இதேபோல, ஏற்கெனவே தொற்று பாதிக்கப்பட்டிருந்த அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மேலும் இரு பிளஸ் 2 மாணவர்களுக்கும், தலைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலும் ஒரு பிளஸ் 2 மாணவருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பள்ளி திறப்புக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
7 ஆசிரியர்கள்