Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM

ஏ.கோவிந்தசாமிக்கு திருவுருவச் சிலை முதல்வருக்கு ஏ.ஜி.சம்பத் நன்றி :

“வேளாண் துறையின் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு விழுப் புரம் மாவட்டத்தில் திருவுருவசிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்” என்று நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதுதொடர்பாக முன்னாள் எம்எல்ஏஏ.ஜி.சம்பத் நேற்று செய்தியாளர் களிடம் கூறியது:

முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் மூலம் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நான் சார்ந்துள்ள பாஜக தலைமை, எனக்கு அனுமதி அளித்தால் முதல்வரை நேரில் சந்தித்து, இதற்காக நன்றி தெரிவிப்பேன்.

முதல்வர் ஸ்டாலின் 15 வயதாக இருக்கும்போதே இவர் பின்னாளில் அரசியல் வாதியாக வருவார் என்று கணித்தவர் என் தந்தை ஏ.கோவிந்தசாமி.

இப்போது அறிவித்தி ருப்பதை நல்லபடியாக நிறை வேற்றுவார் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x