கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் தற்கொலை முயற்சி :

கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் தற்கொலை முயற்சி :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர்கூர்நோக்கு இல்லத்தில் சேர்க் கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த பினாயில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சீர்திருத்த பள்ளி வார்டன் மற்றும் ஊழியர்கள் உடனடி யாக சிறுவனை கடலூர் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.

இதுகுறித்து கடலூர் புது நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in