ராமநாதபுரம் மாவட்டத்தில் : 3 மாணவர்களுக்கு கரோனா :

ராமநாதபுரம் மாவட்டத்தில் : 3 மாணவர்களுக்கு கரோனா :
Updated on
1 min read

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அந்த வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் நடைபெற்றன. மேலும் அந்த வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகள், ஆசிரியருக்கு கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா பரிசோதனை நடந்தது. அதில் 2 மாணவர்கள் மற்றும் ஒரு ஊழியருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதாக ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in