Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் : 3 மாணவர்களுக்கு கரோனா :

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாடானை அரசு இருபாலர் மேல்நிலைப் பள்ளி, திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 இடங்களில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அந்த வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் நடைபெற்றன. மேலும் அந்த வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகள், ஆசிரியருக்கு கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா பரிசோதனை நடந்தது. அதில் 2 மாணவர்கள் மற்றும் ஒரு ஊழியருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதாக ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x