Published : 08 Sep 2021 03:18 AM
Last Updated : 08 Sep 2021 03:18 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் :

டெல்லியில் கடந்த வாரம் பெண் காவலர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்ற வாளிகளை விரைந்து கைது செய்யக் கோரியும் தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் ராஜிக்முகமது தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்ட துணைத் தலைவர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தகிர் தலைமை வகித்தார். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x