மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு ரூ.380 தினக்கூலியை மின்வாரிய நிர்வாகமே நேரடியாக வழங்க வேண்டும். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மின்வாரிய மானியக் கோரிக்கையில் ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரம் பற்றிய அறிவிப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு செங்கல்பட்டு பிரிவு சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திட்ட செயலாளர் தேவகுமார் தலைமை தாங்கினார். இதில் கிளை செயலாளர் பால்ராஜ் கோட்ட செயலாளர்கள் அச்சிறுப்பாக்கம் தீனதயாளன், மதுராந்தகம் பெருமாள், மறைமலை நகர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in