அரசு பள்ளி கட்டிட மேற்கூரை சேதம் :

அரசு பள்ளி கட்டிட மேற்கூரை சேதம் :

Published on

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் அஞ்சாமடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியை ஆர்.கலா நேற்று காலை பள்ளிக்குச் சென்று கதவை திறந்துள்ளார். அப்போது கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பிடிஓ திருநாவுக்கரசு மற்றும் ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோர் சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in