செம்மண் கடத்திய 2 பேர் கைது :

செம்மண் கடத்திய 2 பேர் கைது :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர்ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ராமநாதபுரம் பகுதியில் டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்தலாரியில் எவ்வித அனுமதியும் இன்றி செம்மண் எடுத்துச்சென்றது தெரியவந்தது. லாரியில் இருந்த முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த வைரவன் மகன் கெங்கமுத்து (21) மற்றும் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நம்பி மகன் சங்கரலிங்கம் (38) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். லாரிமற்றும் 2 யூனிட் செம்மண்,இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in