Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM

புவனகிரி அருகே : திட்டையான் வாய்க்காலை தூர்வார வேண்டும் :

புவனகிரி அருகே திட்டையான் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனர். மனுவில் கூறியுள்ளது: புவனகிரி அருகே உள்ள திட்டயான் வாய்க்கால் மூலம் பின்னலூர், தலைக்குளம். கிருஷ்ணாபுரம், வடக்கு திட்டை உட்பட்ட பல கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. தற்போது இந்த வாய்க்காலில் முழுவதும் ஆகாயத்தாமரை, சம்பு, கோரை மற்றும் பல்வேறு செடிகள் அடைத்துக் கொண்டு உள்ளன. இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. மழை நீர் வடிகால் வசதி இல்லாமல் மழைகாலங்களில் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி தாழ்வாக உள்ள கிராம பகுதிகளிலும் புகுந்து விடும். எனவே கடைமடை வரை தூர் வாரிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x