Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

காஞ்சிபுரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழா : மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்

ஊட்டசத்து வார விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பலகையில் கையெழுத்து இட்டு, விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மக்கள் அறியும்படி ஆட்சியர் ஒட்டினார்.

பின்னர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தேரடி வரைநடைபெற்றது. இதில் 100-க்கும்மேற்பட்ட அங்கன்வாடிப் பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சற்குணம், உணவு பாதுகாப்பு அலுவலர் அமுதா, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x