நகை திருட்டு வழக்கில் - ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது :

நகை திருட்டு வழக்கில்   -  ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது :
Updated on
1 min read

விருதுநகர் இளங்கோவன் தெருவைச் சேர்ந்த தம்பதி ஜெயராமன் - விஜயராணி. ஹோட்டல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் உறவினர் திருமணத்துக்குச் சென்று வந்த ஜெயராணி, வீட்டில் உள்ள பீரோவில் நகைகளை வைத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு பீரோவைத் திறந்தபோது நகைகள் திருடு போயிருந்தன. விருதுநகர் கிழக்கு போலீஸார் நடத்திய விசாரணையில், ஜெயராமன் வீட்டுக்கு வந்த உறவினர் பெரியபேராலியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் பாலாஜி(33) நகைகளை திருடியது தெரியவந்தது. போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in