Published : 05 Sep 2021 03:17 AM
Last Updated : 05 Sep 2021 03:17 AM

பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் - நல்லாசிரியர் விருதுக்கு 16 பேர் தேர்வு :

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு நிகழாண்டு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராமர், எழுமூர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ஜெயா, டி.களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் புகழேந்தி, தெரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திருஞானசம்பந்தம், எறையூர் நேரு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியை அபிராமசுந்தரி, அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை உமாவதி ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டததில் மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கோ.பெரியசாமி, மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.சக்திவேல், கவுண்டம்பாளையம் டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ப.செல்வராஜ், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் இரா.ராஜசேகரன், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பெ.தனபால், ஆண்டாங்கோவில்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை த.கண்மணி, மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை ஆ.உமா, க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பெ.ராஜேந்திரன், பஞ்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.ஜெய்குமார், வாங்கல் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் த.பிரகாசம் ஆகிய 10 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x