Published : 05 Sep 2021 03:17 AM
Last Updated : 05 Sep 2021 03:17 AM

மொய் விருந்துக்கான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை

கரோனா பரவலால் மொய் விருந்து நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக் குடி வட்டங்களில் ஆடி, ஆவணி மாதங்களில் மொய் விருந்து நடத்துவது வழக்கம். கரோனா பரவலால் நிகழாண்டு மொய் விருந்து விழா நடத்த ஆட்சியர் கவிதா ராமு கடந்த மாதம் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடை உத்தரவால், ஊருக்குள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உரு வெடுத்துள்ளதால், தடையை நீக்குவதற்கு பரிசீலிக்க வேண்டும் என ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மொய் விருந்து நடத்துவோர் கூறியது:

மொய் விருந்து நடத்துவதற்கு கடந்த மாதம் ஆட்சியர் தடை விதித்துள்ளார். அதன் பிறகு, திரையரங்கு, பூங்கா போன்ற பொழுதுபோக்கும் இடங்கள், கோயில்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏறத்தாழ கரோனாவுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வுக்கு வந்துள்ளன. இந்த சூழலில் மொய் விருந்து விழா நடத்தவும் அனுமதிக்க வேண்டும்.

ஏனெனில், மொய் விருந்து விழாவானது ஆடம்பர விழா அல்ல. இதில் இருந்து வசூலாகும் தொகையை வைத்துதான் அவர வர் குடும்ப பொருளாதார நெருக் கடியை சரி செய்துகொள்ள முடியும்.

மொய் விருந்து நடத்தும்போது, கூட்டம் கூடுவதை தவிர்க்க மொய் எழுதவும், உணவருந்தவும் தனித்தனி இடங்களில் ஏற்பாடு செய்வது, விழாவை காலை 8 மணிக்கே தொடங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகளையும் செய்ய தயாராக உள்ளோம்.

திருமணம், காதணி விழாக் களுக்குக்கூட அந்த நிகழ்ச்சிகள் முடியும் வரை உறவினர்கள் காத்திருப்பர். ஆனால், மொய் விருந்தைப் பொறுத்தவரை யாரும் காத்திருக்க தேவையில்லை.

ஆனால், கடந்த ஆண்டுகளில் மொய் விருந்து வைத்து பல லட்ச ரூபாயை வசூலித்தவர்களில் சிலர், நிகழாண்டு மற்றவர்களுக்கு திருப்பி செலுத்த விருப்பம் இல்லாமல் தடையை நீட்டிக்க முயற்சி செய்து வருகின்றனர். இது, திட்டமிட்ட சூழ்ச்சியாகும்.

இதற்காக, அலுவலர்களுக்கு பொய்யான காரணங்களைக் கொண்டு புகார் மனுக்களை அனுப்பி வருவதுடன், சமூக வலை தளங்களிலும் தவறான தகவல் களை பதிவிட்டு வருகின்றனர். இதனால், ஊருக்குள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. அப்பாவிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். எனவே, மொய் விருந்துக்கான தடையை ஆட்சியர் நீக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x