Published : 05 Sep 2021 03:17 AM
Last Updated : 05 Sep 2021 03:17 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - 27 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு :

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதினை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 27 ஆசிரியர்கள் பெறுகின்றனர்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் பட்டியல் மாவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வேலூர் மாவட்டத்தில் 9 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 பேர் என மொத்தம் 27 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வேலூர் மாவட்டத்தில் திருமணி அரசினர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.சிவக்குமார், செம்பேடு அரசினர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தா.வேலன், கிளித்தான்பட்டரை கல்வி உலகம் சிவானந்தம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு, சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை வெ.ஜெயந்தி, வேலூர் கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை இரா.பிரிஜெட், குடியாத்தம் பொன்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ப.கார்த்தி, வேலூர் ஜமால்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பி.சக்திவேல், அணைக்கட்டு மருதவல்லிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை தா.கவிச்செல்வி, காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி முதல்வர் ம.சு.சரவணன் ஆகியோர் விருது பெற உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் கேதாண்டப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.அருண் குமார், கசிநாயக்கன்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நா.ஜனார்தனன், திருப்பத்தூர் புதுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சி.செலினா, பூங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கா.பிரதீப், மேல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ஜி.கஜலட்சுமி, ஆலங்காயம் சிந்தகாமணிபெண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆ.அருண்குமார், சின்னவெங்காயப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ச.செண்பகவள்ளி, ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.சரணவன் ஆகியோர் விருது பெற உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெல்  ராமகிருஷ்ணணா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மோ.கோட்டீஸ்வரன், அரக்கோணம் சி.எஸ்.ஐ தூய அந்திரேயர் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் சை.அற்புதராஜ், ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பெ.பாலகிருஷ்ணன், காரை அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கி.பழனி, ஆற்காடு முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கோ.தரணிபாய், திருப்பாற்கடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ப.வீரபத்திரன், திமிரி அடுத்த கணியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சா.ஜெயந்தி, கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.துளசிராமன், சிப்காட் சி.எஸ்.ஐ மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் வே.வேணுகோபால் ஆகியோர் விருது பெற உள்ளனர்.

இவர்களுக்கு, விருதுடன் ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்பட உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க உள்ளனர்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் த.ஐயப்பன் நல்லாசிரியர் விருது பெற உள்ளார். இவருக்கு விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x