Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM

சாலைப்பணிகளை கோட்டப் பொறியாளர் ஆய்வு :

முஷ்ணம் அருகே நடைபெற்ற சாலைப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறி யாளர் ஆய்வு செய்தார்.

முஷ்ணம் அருகே உள்ளகுணமங்கலம்- கூடைலையாத்தூர் சாலை, பாளையங்கோட்டை - கொழை சாலை, கருவேப்பு லங்குறிச்சி- ராஜேந்திரபட்டினம் சாலை ஆகியவற்றில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இந்தபணிகளை கடலூர் நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறி யாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பரந்தாமன் நேற்றுபார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து அவர் பாளையங் கோட்டை -கொண்டசமுத்திரம் சாலை ஓரத்தில் மரக்கன்றை நட்டு இந்த ஆண்டிற்கான மரக்கன்று நடும் பணிகளை தொடக்கி வைத்தார். உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிபொறியாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x