Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM

கார் மோதி வியாபாரி மரணம் :

உச்சிப்புளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தார்.

உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(55). இவர் உச்சிப்புளியில் பழ வியாபாரம் செய்து வந்தார். உச்சிப்புளி எம்ஜிஆர் கல்லூரி அருகே உள்ள தோப்புக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று பிற்பகலில் சென்றுவிட்டு, மதுரை-ராமேசுவரம் சாலையை கடக்க முயன்றார். அப்போது ராமேசுவரம் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நாகராஜன் படுகாயமடைந் தார். அதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நாகராஜன் உயிரிழந்தார். இது குறித்து உச்சிப்புளி போலீஸார் கோவையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் நாகேந்திரன்(42) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x