காளையார்கோவில் அருகே - ஆசிரியர்கள் பணியில் இருந்தபோது பெயர்ந்து விழுந்த பள்ளி மேற்கூரை :

காளையார்கோவில் அருகே நற்புதம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த மேற்கூரை.
காளையார்கோவில் அருகே நற்புதம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த மேற்கூரை.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே ஆசிரியர்கள் பணியில் இருந்தபோது பள்ளி மேற்கூரை பூச்சு ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தது.

காளையார்கோவில் அருகே நற்புதம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அப்பகு தியைச் சேர்ந்த 24 மாணவர்கள் படிக்கின்றனர். கரோனா பரவல் காரணமாக ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்கள் பள்ளி வரத் தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் நற்புதம் பள்ளிக்கு மாணவர்கள் வருவதில்லை. ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

அப்பள்ளி கட்டிடம் சேத மடைந்த நிலையில் உள்ளதால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கட்டிடத்தில் தண்ணீர் கசிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் ஆங்காங்கே மேற்கூரை பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை. இப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in