திண்டுக்கல் அருகே - மதுக்கடை திறப்பதை எதிர்த்து மறியல் :

திண்டுக்கல் அருகே -  மதுக்கடை திறப்பதை எதிர்த்து மறியல் :
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டி கிராமம் அன்னை நகருக்கும் பெரியார் நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் அரசு மதுபானக் கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதையறிந்த கிராம மக்கள் தங்களது பகுதியில் அரசு மதுபானக் கடை அமைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். இருந்தபோதும் மக்களின் எதிர்ப்பை மீறி பணிகள் நடந்தன. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மழை பெய்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் குட்டத்துப்பட்டி, இந்திரா நகர், பெரியார் நகர் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in