காரிக்கோட்டை காரி அழகர் ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் :

காரிக்கோட்டை காரி அழகர் ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டையில் உள்ள காரி அழகர் ஐயனார் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, யாக சாலை பூஜைகளுக்குப் பிறகு சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊர்வலமாக எடுத்துவந்து, கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர், காரி அழகர் ஐயனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சப்த கன்னி அம்மன் கோயிலில்

முன்னதாக, செப்.2-ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாக பூஜை, மஹாபூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று யாக பூஜைகள், தீபாராதனை முடிந்ததும் காலை 8.30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் பின்னர், மூலஸ்தான கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in