நீலகிரி பசுந்தேயிலை கிலோ ரூ.14.38- ஆக நிர்ணயம் :

நீலகிரி பசுந்தேயிலை கிலோ ரூ.14.38- ஆக நிர்ணயம் :
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.14.38 என நிர்ணயித்து தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேயிலை வாரியம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் சிறு விவசாயிகளிடம் இருந்து தேயிலை தொழிற் சாலைகள் கொள்முதல் செய்யும் பசுந் தேயிலைக்கான விலையை மாதந்தோறும் இந்திய தேயிலை வாரியம் நிர்ணயம் செய்து வருகிறது.

செப்டம்பர் மாதத்தில் சிறு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.14.38 வழங்க வேண்டும் இந்த குறைந்தபட்ச விலையை தொழிற்சாலைகள் முறையாக வழங்குகிறதா என்பதை தேயிலை வளர்ச்சி வாரிய அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும். இதை மீறும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in