Published : 03 Sep 2021 03:15 AM
Last Updated : 03 Sep 2021 03:15 AM

சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் - மின்னல் தாக்கி 2 விவசாயிகள் உயிரிழப்பு :

சிதம்பரம், புவனகிரி பகுதியில் மின்னல் தாக்கி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள முகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதம் (55). இவர் நேற்று வயலில் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதுநேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி யதில் பாலதண்டாயுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து புத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் புவனகிரி அருகே உள்ள பிரசன்னராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (30). இவர் நேற்று வயலில் நெல் விதைப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி கலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மருதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x