: அதிமுக நிர்வாகிகளின் காரில் தீ விபத்து

செம்பட்டி அருகே விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த கார்.
செம்பட்டி அருகே விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த கார்.
Updated on
1 min read

செம்பட்டி அருகே அதிமுக பிரமுகர்கள் வந்த கார் விபத்துக் குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகர அதிமுக பொரு ளாளர் ராஜாராம் (51). குத்தாலம் நகர வர்த்தகர் அணி செயலாளர் கோபால் (58), நகர இளைஞர் அணி தலைவர் தன்ராஜ் (43) ஆகியோர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு அஞ்சலி செலுத்த பெரியகுளத்துக்கு காரில் சென்றனர். காரை கோவிந்தராஜ் (53) ஓட்டிச் சென்றார்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சுதனாகியபுரத்தில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பக்க டயர் ஒன்று கழன்று விழுந்தது. இதில் நிலைதடுமாறிய கார், அருகிலுள்ள பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனடியாக கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் காயமடைந்த 4 பேரும் உடனடியாக காரிலிருந்து வெளியேறி தப்பினர்.ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். காயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in