மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசைக் கண்டித்து, திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பு ஆகியன சார்பில், மின் வாரிய திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு துணைச் செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ரங்கம், மன்னார்புரம், லால்குடி, முசிறி, துறையூர், மணப்பாறை ஆகிய மின் வாரிய அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in