Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM

நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில் - மண் கொட்டும் இயந்திரம் சரிந்து 5 தொழிலாளர்கள் காயம் :

நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் மண் கொட்டும் இயந்திரம் சரிந்து 5 பேர் காயமடைந்தனர்.

நெய்வேலி என்எல்சி சுரங்கம் 2-ல் நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக மேல் மண் வெட்டி எடுக்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளமான பகுதியில் மண் கொட்டும் இயந்திரத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மண் கொட்டும் இயந்திரம் நேற்று காலை திடீரென்று சரிந்தது. இதில் பணியில் இருந்த நிரந்தர தொழிலாளர்கள் வடலூர் சேகர் (36), நெய்வேலி வட்டம் 26-ஐ சேர்ந்த வேல்முருகன் (58), ஒப்பந்த தொழிலாளர்கள் வீரபெருமாநல்லூரைச் சேர்ந்த சந்திரசேகரன் (35), நெய்வேலி இந்திராநகரைச் சேர்ந்த பாலமுருகன் (49), தர்மநல்லூர் மணிகண்டன் (36) ஆகிய 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் 5 பேரும் என்எல்சி பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x