Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM

நெய்வேலியில் ரவுடி கொலை :

நெய்வேலி மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த அருண் என்றஅருண்குமார் (32) மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மந்தாரக்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் நின்றுகொண்டிருந்த அருண்குமாரை நேற்றிரவு மர்மநபர்கள் சுற்றி வளைத்து கழுத்தறுத்து கொலை செய்தனர். இதுகுறித்து நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும்மந்தாரக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலை யாகி வந்த அருணை எதிரிகள் நோட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x