

தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று சுமார் 70 சதவீத மாணவ, மாணவியர் வருகை தந்தனர்.
அரசு உத்தரவுப்படி தருமபுரி மாவட்ட பள்ளிகள் நேற்று திறக்கப் பட்டன. மாவட்டத்தில் உள்ள 355 பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் 87 ஆயிரத்து 334 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று சுமார் 70 சதவீதம் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்தனர். தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நேற்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பள்ளிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவுரை
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வட்டாட்சியர் பிரதாப் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.