வீட்டின் பூட்டை உடைத்து : 10 பவுன் நகை திருட்டு :

வீட்டின் பூட்டை உடைத்து  : 10 பவுன் நகை திருட்டு :
Updated on
1 min read

வேலூர் அலமேலுமங்காபுரம் அடுத்த ஜெகஜோதி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (65) ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர், கடந்த 29-ம் தேதி தனது குடும்பத்தாருடன் ஈரோட்டுக்கு சென்றார். பின்னர், நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் முன் கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in