பூங்கா ஊழியர்களுக்கு தடுப்பூசி :

பூங்கா ஊழியர்களுக்கு தடுப்பூசி  :
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உதகை நகராட்சி மற்றும் குன்னூர் நகராட்சி பகுதிகளில் ஒருசிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் வீடுகளுக்கே சுகாதாரப் பணியாளர்கள் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். எந்த வார்டு பகுதிகளில் அதிக நபர்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனரோ அந்தப்பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக நீலகிரியில் பூட்டப்பட்டிருந்த பூங்காக்கள் ஆகஸ்ட் 23-ம் தேதி திறக்கப்பட்டன.

இதையடுத்து பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்கள் பூங்காவிலேயே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் சுகாதாரத் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி உதகையில் உள்ள கர்நாடகா பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் 30 பேருக்கு பூங்கா வளாகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in