மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு :

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு :
Updated on
1 min read

திண்டிவனம் அருகே பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (46). இவர் நேற்று காலை தனது நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்காக பம்ப் செட்டில் மோட்டாரை இயக்க ஸ்விட்சை போட்டார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீஸார்வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த குமாருக்கு லட்சுமி என்ற மனைவியும், சங்கீதா என்ற மகளும், சீதாராமன் என்ற மகனும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in