Published : 01 Sep 2021 03:17 AM
Last Updated : 01 Sep 2021 03:17 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு :

கடலூர்

வடலூர் அருகே உள்ள அரங்கமங் கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நேற்று நடைபெற்றது.

இதில், அரங்கமங்கலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பரிந்துரை செய்ய அமைச்சரிடம் கோரிக்கை வைப்பது, குறிஞ்சிப் பாடியிலிருந்து அரங்கமங்கலம் வரை இயக்கப்படும் அரசு பேருந்தை ஓணான்குப்பம் வரை நீட்டிக்க அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளருக்கு கோரிக்கை வைப்பது, பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருக்கும் கிராம மக்களுக்கு பட்டா வழங்க குறிஞ்சிப்பாடி வட்டாட்சியரிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x