கணவரை கொலை செய்த மனைவி கைது :

கணவரை கொலை செய்த மனைவி கைது :
Updated on
1 min read

சிவகங்கை அருகே சுந்தரநடப்பைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜாங்கம் (45). இவரது மனைவி விஜயாராணி (40). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் ராஜாங்கம் தினமும் மது குடித்துவிட்டு மனைவியிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் மதுபோதையில் மனைவியிடம் பிரச்சினை செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயாராணி, ராஜாங்கத்தை கழுத்தறுத்து கொலை செய்தார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விஜயாராணியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in