செங்கோட்டை- நெல்லைக்கு பயணிகள் ரயில் இயக்க கோரிக்கை :

செங்கோட்டை- நெல்லைக்கு பயணிகள் ரயில் இயக்க கோரிக்கை :
Updated on
1 min read

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தென்னக ரயில்வே மேலாளர், மதுரை கோட்ட மேலாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பி யுள்ளனர்.

அதில், ‘மதுரை- செங்கோட்டை இடையே ஆகஸ்ட் 30 முதல் முன்பதிவில்லா விரைவு ரயில் இயங்குகிறது. இந்த ரயில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு செங்கோட்டையை அடைகிறது. மறு மார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரையை சென்றடைகிறது.

காலை நேரத்தில் மதுரை- செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் ரயில் போல மற்றொரு ரயிலை காலையில் செங் கோட்டையில் இருந்து மதுரைக்கும், மறு மார்க்கத் தில் மாலையில் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கும் இயக்க வேண்டும். மேலும், செங்கோட்டை- திருநெல்வேலி இடையே இயங்கிய பகல் நேர பயணிகள் ரயில்களை முன்பதிவில்லா ரயில்களாக இயக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in