6 மாதமாக எரியாத உயர் கோபுர மின் விளக்குகள் :

6 மாதமாக எரியாத உயர் கோபுர  மின்  விளக்குகள்  :
Updated on
1 min read

வாலாஜாபாத் அருகே அவளூர் கூட்டுச் சாலையில் பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு இரவு நேரத்தில் திருடர்கள் அச்சம் இருப்பதால், உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

இந்த மின் விளக்கு கடந்த 6 மாதமாக எரியாமல் உள்ளது. இது தொடர்பாக பலமுறை உரிய அலுவலரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இதனை சரி செய்துள்ளனர். ஆனாலும் ஒரு நாள் மட்டுமே இந்த உயர்கோபுர மின் விளக்கு எரிந்துள்ளது. அதன் பின்னர் எரியவில்லை.

இதனால் இரவு நேரங்களில் இங்குள்ள வணிக நிறுவனங்களில் பொருட்கள் திருடு போகும் அச்சம் உள்ளது. இந்த மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என்று வணிகர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in