நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பு : மாணவர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம் :

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை ஆட்சியர் மோகன் வழங்கினார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை ஆட்சியர் மோகன் வழங்கினார்.
Updated on
1 min read

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நேற்று அந்தந்த கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இரண்டு நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆட்சியர் மோகன் நேற்று தொடங்கி வைத்தார்.

“இங்கு வந்திருக்கும் அனைவரும் உங்களது நண்பர்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளியுடன் அமர்ந்து பாடம் கற்க வேண்டும்” என்று அப்போது ஆட்சியர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in