இருதரப்பினர் இடையே தகராறில் இளைஞர் கொலை; 3 பேர் கைது :

இருதரப்பினர் இடையே தகராறில் இளைஞர் கொலை; 3 பேர் கைது :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டுமகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் கதிர்வேல் மகன் அருண்குமார்(23), ஜோதிவேல்(33). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மேட்டுமகாதானபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நந்தன்கோட்டையைச் சேர்ந்த அண்ணாவி மகன்கள் பெரியசாமி(27), வினோத்(24), கீழசிந்தலவாடியைச் சேர்ந்த ஆனந்தன்(23) ஆகியோர் சாலையில் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். இதை ஜோதிவேலும், அருண்குமாரும் தட்டிக்கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அன்று இரவு ஜோதிவேல், அருண்குமார் ஆகியோர் தங்களின் நண்பர்களுடன், பெரியசாமி உள்ளிட்டோரை சந்திப்பதற்காக கீழசிந்தலவாடிக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், அருண்குமார் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

தகவலறிந்த லாலாபேட்டை போலீஸார் அங்கு சென்று, அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, பெரியசாமி, வினோத், ஆனந்தன் ஆகியோரை கைது செய்தனர். கொலை நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி ப.சுந்தரவடிவேல், குளித்தலை டிஎஸ்பி சக்திவேல், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகியோர் பார்வையிட்டனர். இப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in