உழவர் சந்தையை மீண்டும் திறக்க : சிபிஎம் வலியுறுத்தல் :

உழவர் சந்தையை மீண்டும் திறக்க  : சிபிஎம் வலியுறுத்தல் :
Updated on
1 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு நகர கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், இராட்டிணங்கிணறு பகுதியில் இருந்து வல்லம், அமணபாக்கம் பகுதிகளுக்குச் செல்லும் சுரங்கப் பாதையை சீரமைக்க வேண்டும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலை காய சிகிச்சைக்கு தனிப் பிரிவு தொடங்க வேண்டும், மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in