Published : 30 Aug 2021 03:15 AM
Last Updated : 30 Aug 2021 03:15 AM

சக்தி மசாலா நிறுவன பணியாளர்களுக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி :

ஈரோடு சக்தி மசாலா நிறுவன பணியாளர்களுக்கு, நிர்வாகத்தின் ஏற்பாட்டில், இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் கரோனா பரவலை தடுக்கும் முயற்சியிலும், அரசுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையிலும், பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 18 வயது முதல் 44 வயது வரையிலான 606 பணியாளர்களுக்கு, தனியார் மருத்துவமனையில் ரூ 4.72 லட்சம் செலுத்தி, இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சி. துரைசாமி, சாந்தி துரைசாமி, சக்தி மருத்துவமனையின் மருத்துவர் செந்தில் முருகன் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் முகாம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முகாமில், தனியார் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள், 606 பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். ஈரோடு தன்வந்திரி மருத்துவமனையின் செவிலியர்கள் மற்றும் சக்திதேவி அறக்கட்டளை மற்றும் சக்தி மருத்துவமனையின் பணியாளர்கள், சக்தி மசாலா நிறுவன நிர்வாகத்தினர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x