பள்ளிகளில் தூய்மைப்பணி :

பள்ளிகளில்  தூய்மைப்பணி  :
Updated on
1 min read

தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் நிலையான வழிகாட்டு முறைகளும் வெளியிடப் பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது தொடர் பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பட்டது.

மாநகராட்சி ஆணையர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசின் உத்தரவுப்படி செப்.1-ம் தேதி முதல் உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசின் கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி பள்ளிகளின் வளாகம், வகுப்பறைகள், பரிசோதனை கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in