Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM

மிலாடி நபி விழாக்குழுவின் கரோனா தடுப்பூசி முகாம் :

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தவுலதாபாத் சுன்னத் ஜமாத் கமிட்டி மற்றும் மிலாடி நபி விழாக் குழு இணைந்து அனைத்து சமுதாய பொதுமக்களும் பயன்பெறும் வகையில், தடுப்பூசி முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி புதுப் பேட்டை லட்சுமணராவ்தெருவில், நடைபெற்ற முகாமினை டிஎஸ்பி சரவணன் தொடங்கி வைத்தார்.

மிலாடி நபி விழாக்குழுத் தலைவர் அஸ்லம் ரகுமான் ஷெரீப் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் முருகேசன் முன்னிலை வகித்தார். தடுப்பூசி முகாம் இன்றும் (29-ம் தேதி), நாளையும் (30-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்க உள்ளது. அதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும், கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய மருந்துகளை முதல் மற்றும் 2-வது தடுப்பூசியாக செலுத்திக் கொள்ளலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா, மருத்துவர்கள் வெங்கடேசன், உமா மகேஸ்வரி, சுன்னத் ஜமாத் கமிட்டியின் அஸ்லாம், சனாவுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x