இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை -  41 பவுன் நகைகள் திருட்டு :

இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை - 41 பவுன் நகைகள் திருட்டு :

Published on

திருவள்ளூர் தாலுகா, வரதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் வீரன். நேற்றுமுன்தினம் காலை இவர் தனது வீட்டைப் பூட்டி விட்டு வேலைக்குச் சென்றார். பின்னர், வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்தார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் எடையுள்ள நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, வீரன் அளித்த புகாரின் பேரில் திருவள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

இதேபோல், கொமக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி பூங்கொடி. இவர்தனது மகனுடன், வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு, நேற்றுமுன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த பீரோ லாக்கரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகைகள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வெங்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in