பெண் தீக்குளித்து தற்கொலை :

பெண் தீக்குளித்து தற்கொலை :
Updated on
1 min read

பிறந்த நாளன்று கணவர் கோயி லுக்கு அழைத்துச் செல்லாததால் விருதுநகர் அருகே பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் அருகே உள்ள கெப்பிலிங்கம்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது மனைவி புஷ்பவள்ளி(25). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. புஷ்பவள்ளிக்கு கடந்த 15-ம் தேதி பிறந்த நாள். எனவே தன்னை கோயிலுக்கு அழைத்துச் செல்லுமாறு ஆறுமுகசாமியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புஷ்பவள்ளி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பவள்ளி நேற்று உயிரிழந்தார். மல்லாங்கிணர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in