நெல்லை சரக காவல் அதிகாரிகளுக்கு நடந்த - துப்பாக்கிச் சுடும் போட்டியில் தென்காசி எஸ்பி முதலிடம் :

வல்லநாடு துப்பாக்கிச் சுடு தளத்தில் திருநெல்வேலி சரக காவல் அதிகாரி களுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி நடந்தது.
வல்லநாடு துப்பாக்கிச் சுடு தளத்தில் திருநெல்வேலி சரக காவல் அதிகாரி களுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி நடந்தது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடுதுப்பாக்கிச் சுடுதளத்தில் திருநெல்வேலி சரகத்துக்கு உட்பட்ட காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி நடந்தது.

இதில், இன்சாஸ் ரக துப்பாக்கிச் சுடும் பிரிவுக்கான போட்டியில் வள்ளியூர்உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் 2-வது இடத்தையும், தூத்துக்குடி பேரூரணி காவலர்பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் 3-வது இடத்தையும் பிடித் தனர்.

பிஸ்டல் ரக துப்பாக்கிச் சுடும் போட்டியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முதலிடத்தையும், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் 2-வது இடத்தையும், திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

ஒட்டுமொத்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் முதலிடத்தையும், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் 2-வது இடத்தையும், வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா 3-வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் என்.கே.செந்தாமரைக்கண்ணன் பரிசு வழங்கி பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in