ராமநாதபுரத்தில்சிஐடியூ ஆர்ப்பாட்டம் :

ராமநாதபுரத்தில்சிஐடியூ ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டித்து சிஐடியூ சார்பில் ராமநாதபுரம் போக்குவரத்துக் கழக புறநகர் பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ மாவட்டத் தலைவர் அய்யாதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, மின்வாரியப் பொறியாளர் அமைப்பின் மாநிலத் தலைவர் ஜீவானந்தம், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கச் செயலாளர் முத்துப்பாண்டி, போக்குவரத்துக்கழக புறநகர் பணிமனை செயலாளர் போஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தைக் கண்டித்து கோஷமிட்டனர்.

சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கரன், மலைராஜன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டச் செயலாளர் காசிநாதன், லோடுமேன் சங்க மாவட்ட தலைவர் பூமிநாதன் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in