பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்டிமடத்தை அடுத்த இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த புரட்சித்தமிழன்(23), கட்டப் பஞ்சாயத்து செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட புதுச்சாவடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் ராஜசேகர்(34), உரிய அனுமதியின்றி பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த ஜெயங்கொண்டத்தை அடுத்த கொங்குநாட்டார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மனைவி கிருஷ்ணவேணி(28) ஆகியோரை எஸ்.பி கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in